நீர் வெட்டு




கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று 17 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. 

இன்று நண்பகல் 12.00 மணுமுதல் நாளை அதிகாலை 05.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி கோட்டே மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொழும்பு 05, 07, 08 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

அதேநேரம் மகரகம, பொரலஸ்கமுவ நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொழும்பு 06 பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது. 

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.