சீரற்ற வானிலையால் காலியில்




காலி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவிவருவதுடன், இதனால் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த, 12,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காலி மாவட்டத்தில், இம்முறை இருவர் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் வௌ்ளம்  காரணமாக, 16 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை, 773 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளதுடன், 172 வர்த்தக நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.