பாதுகாப்பு காரணங்களுக்காக, பிரதமர் அலுவலக கட்டடத்துக்குள் உள்நுழையும் வளாகத்தில் அனுமதியின்றி அலைபேசிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு, அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் எச்.ஏ சுனில் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் தேவையற்ற அலைபேசி பாவனையால் ஏற்படும் பிரச்சினைகளாலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக செயலாளர் எச்.ஏ சுனில் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மிக குறுகிய நாட்களுக்கு மாத்திரமே இந்த விடயம் அமுல்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment