போடைஸ் தோட்ட குடியிருப்பில்,தீ


(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட போடைஸ் 30 ஏக்கர் தோட்ட குடியிருப்பில் 29.12.2018 அன்று அதிகாலை 6 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் 24 வீடுகளும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

முற்றாக எரிந்த வீடுகளில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.