அலுகோசு பதவிக்கு மீண்டும் விண்ணப்பம் கோரல்



சிறைச்சாலையில் மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எம்.எம்.என்.சி தனசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த பதவிக்கு மூன்றாவது முறையாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கோரப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து நபர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் குறித்த பதவியிலிருந்து விலகிச் சென்றமையினால் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரிகள் சாதாரண தர பரீட்சையில் இரண்டு திறமைச்சித்திகளுடன் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன் 45 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
அதேவேளை ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பங்களும் மீண்டும் கவனத்திற்கொள்ளப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் எம்.எம்.என்.சி தனசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Executioner - Department of Prisons
Closing Date: 2019-02-25 
Daily News (2019.02.11)