தென் ஆபிரிக்கா 3 வது போட்டியிலும் போட்டுத் தாக்கியது, இலங்கையை




இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

டர்பன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. 

இதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்கா அணி 50 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

தென் ஆபிரிக்கா அணி சார்பில் டி கெக் 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் டச்சன் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இசுறு உதான 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். 

இதன்படி இலங்கை அணிக்கு 332 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. 

பின்னர் போட்டி 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 193 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

இருப்பினும் இலங்கை அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது