பர்சான் எரிவாயு ஆலையில் விபத்து
கத்தார் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக ஆலையில், செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த விபத்து நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்பொழுது தீயைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களின் முழு விபரம் இன்னும் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை.
உலகில் இயற்கை எரிவாயு
முக்கிய LNG சுத்திகரிப்பு வளாகமான ராஸ் லஃப்பானில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்திற்குப் பிறகு ஆலையில் பணியாற்றிய 14 ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கத்தார் நாட்டு உள்துறை அமைச்சகம் எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த உள் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Post a Comment
Post a Comment