( அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம்
என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மீண்டும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர் பணியாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் தன்னை அப்பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக ஆட்சேபனை மனு தாக்கல் கடந்த மார்ச் ஜந்தாம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ்வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட எம்.டி.எம்.நிஸாம் என்பவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினை வழங்கியிருந்தது.
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாவினால் வழங்கப்பட்ட "கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்" நியமனத்தை அடுத்த வழக்கிற்கு அழைக்கும் வரை இடைக்கால தடை விதிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.
இதேவேளை இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (19) வழக்கு அழைக்கப்பட்ட போது மீண்டும் மாகாண கல்வி பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர் என்பரை கடமையாற்றுமாறு இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.
அத்துடன் மனுதாரர் எம்.கே.எம்.மன்சூர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.சீ.சபருள்ளா என்பவருக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் பற்றி நீதிபதி இரு தரப்பினருக்கும் விளங்கப்படுத்தினார்.
மேலும் நீதிபதி நீதிமன்றில் இரு தரப்பினர்களுக்கும் தெரிவிக்ககையில் அச்சுறுத்தல்களை தவிர்த்து அனைவரும் சட்ட வரம்பிற்குள் வந்து சட்டம் தொடர்பான நியாயங்களை முன்வைத்து தத்தமது வழக்குகளை கொண்டு நடாத்துமாறு இருசாராருக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.
இதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நடாத்தப்படுகின்ற ஹர்த்தால் அனுஸ்டிப்பில் திருகோணமலை சட்டதடதரணிகள் சங்கமும் அனுசரனை வழங்கியுள்ளதால் இவ்வழக்கில் மனுசாதரான எம்.கே.எம்.மன்சூர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வழக்கிற்கு ஆஜராகவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது்.
எதிர் மனுதார் சார்பில் கிழக்கு மாகாண சபை சட்ட உத்தியோகத்தர் அனிபூ லெப்பை உட்பட மனுதாரர்களான கிழக்கு மாகாண ஆளுநர் சார்பில் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஆளுநர் அலுவலக இணைப்புச்செயலாளர் யூ. சிவராஜா கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முத்துபண்டா மற்றும் எம்.டி.நிஸாம் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன் போது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இரு தரப்பினருக்கும் கடுமையாக எச்சரித்ததுடன் ஆலோசனைகளையும் வழங்கினார்.
கிழக்கு மாகாணத்தில் அதியுயர் மட்டத்தில் இருக்கின்ற இருசாராரும் சமூக வளைத்தலங்களில் ஆதரவுகளை பெற்று மக்கள் மத்தியில் விரிசல்களை ஏற்படுத்த வேண்டாமெனவும் ,பொதுமக்களின் ஆதரவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தங்களது ஆட்சேபனைகளையும் .கருத்துக்களையும் தங்களது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சமர்பித்து தங்களது உரிமைகளை வென்றெடுக்குமாறும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அச்சுறுத்தல்களுக்கோ அல்லது தங்களது செல்வாக்குகளுக்கோ நீதிமன்றம் இடமளிக்காது எனவும் சட்டத்தையே நிலை நாட்டுவோம் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இதன் போது தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment