கைது



பாதாள உலகக்குழு உறுப்பினர் கெசெல்வத்த தினுகவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி கெசல்வத்தை பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

கைது செய்யப்படும் போது, சந்தேகநபரிடம் இருந்து 02 கிராமும் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.