தேசிய புத்தரிசி பொங்கல்


52வது தேசிய புத்தரிசி பொங்கல் விழா இன்று காலை அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் இடம்பெற்றது. 

காலை 6.00 மணிக்கு பால்சோறு வழிபாடு இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து பிரித் பாராயணமும் நடைபெற்றது. 

அட்டமஸ்தானாதிபதி சங்கைக்குரிய கலாநிதி பல்லேகம ஸ்ரீனிவாச தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றுவன்வெலி ஷாய பிரதான தேரர் கலாநிதி சங்கைக்குரிய பள்ளேகம ஹேமரத்னவும் வழிபாடுகளை நடத்தினார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் புத்தரிசி வழிபாடுகளில் கலந்து கொண்டனர். அமைச்சர் பி.ஹரிசன் முதலாவதாக புத்தரிசி வழிபாட்டை மேற்கொண்டார். 

அரச தகவல் திணைக்களம்