சொட்டும் மிச்சம் வைக்காமல்


மருதமுனை ஹரீஷாவின் ( சிரேஷ்ர ஊடகவியலாளர் -P.M.M.A.Cader அவர்களின் சிரேஷ்ர புதல்வி) " சொட்டும் மிச்சம் வைக்காமல் " கவிதை நூல் வெளியீட்டு விழா  ஞாயிற்றுக்கிழமை ( 07-04-2019) மாலை மருதமுனை பொது நூலக "மர்ஹூம் மருதூர் வாணர்" அரங்கில் எனது தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை சுகாதார,  சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் A.H.M.Ansar Sir அவர்களும் , கெளரவ அதிதிகளாக பேராசிரியர் S.Yogarasa, பேராசிரியர் Rameez Abdullah ஆகியோரும்,விசேஷ அதிதியாக  உலகப்புகழ் சிறுகதை எழுத்தாளர் Uma Varatharajanஅவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் . நூல் நயவுரை வழங்கினார் பிரபல விமர்சகர் Jesmy Moosa அவர்கள்.
நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார் எமது Pirai.F.M அறிவிப்பாளர் A.L.M.Sinas .