ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு எதிராக பொதுமக்கள் நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்




(க.கிஷாந்தன்)
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியை கைது செய்யுமாறு கோரியும், குருணாகல் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் 15.06.2019 அன்று நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரையும் கைது செய்யுமாறு கோரியும், வைத்தியருக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா நகர மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 100ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தேசிய சுதந்திர முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாணத்தின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ, நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் சரத் குமார உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.