(க.கிஷாந்தன்)
30 நாட்கள் நோன்பு இருந்து 05.06.2019 அன்று மூஸ்லீம்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடினர்.
அந்தவகையில் மலையகத்தில் மூஸ்லீம்கள் ரமழான் பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் கொண்டாடினார்கள்.
அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் பிரதான மௌலவி ஹஜூமல் தலைமையில் அட்டன் மூஸ்லீம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும், பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.
ஆனால் பண்டிகையை அட்டன் வாழ் மூஸ்லீம் மக்கள் இந்த முறை முழுமையான சந்தோஷத்துடன் கொண்டாடவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment