சீரற்ற காலநிலையினால் போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம்




இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு பிரிஸ்டோலில் ஆரம்பமாசதாக இருந்தது. 

இந்த போட்டிக்கான நாணய சுழற்சி 2.30 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டியிருப்பினும் மழை பெய்து வருவதால் நாணய சுழற்சியை சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

நேற்று நடைபெற இருந்த தென்ஆப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.