எச்சரிக்கை


ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பாரிய மின்னல் தாக்கம் காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வெளியிட்ட குறித்த எச்சரிக்கை அறிக்கை இரவு 7.30 மணிவரை அமுலில் இருக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.