மீஉயர் நீதிமன்றின் உத்தரவு


ஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் இலங்கை மருத்துவ சபைக்கு உத்தரவிட்டுள்ளது. 

பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற 16 மாணவ மாணவிகள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றிருந்த தம்மை இலங்கை மருத்துவ சபை தம்மை பதிவு செய்யவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். 

இதன்காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.