நீதியை எரிக்காதீர்கள்! சட்டத்தரணிகள் போர்க் கொடி


முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வட கிழக்கு மாகாணசட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்தப் பொலிஸார் தவறினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்தசட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்ளப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, ஆகிய இடங்களிலும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.