அநுர குமார திஸாநாயக்க,அட்டனில்




(க.கிஷாந்தன்)
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிமுகம் செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக அட்டனில் மக்களை சந்திக்கும் நிகழ்வு 22.09.2019 அன்று காலை அட்டன் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக மலையக சகோதரத்துவ இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பு குழு தலைவர் மஞ்சுள சுரவீர, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்னண் செல்வராஜ், எழுத்தாளர் என்டனி ஜீவா, விரிவுரையாளர் விஷ்வநாதன் சதாநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலையக பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.