பாதிக்கப்படுவது மக்கள்




(க.கிஷாந்தன்)
வேதனம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் 23.09.2019 அன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மலையகத்திலும் அரச அதிகாரிகள் 23.09.2019 அன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொது நிர்வாக அமைச்சினால் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்தவகையில் கொத்மலை பிரதேச செயலகத்தில் சில அதிகாரிகள் சேவையில் ஈடுப்பட்டிருந்தாலும் சில அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இங்கு சேவைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.