உளவளத்துணை தினத்தை முன்னிட்டு


பாறுக் ஷிஹான்

சர்வேதேச மனநல மற்றும் உளவளத்துணை தினத்தை  முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமொன்று  கல்முனையில்  இடம்பெற்றது.

மேற்படி  விழிப்புணர்வு  ஊர்வலம்  செவ்வாய்க்கிழமை(15) கல்முனை ரோயல் வித்தியாலய   .பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்றது .

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் ஆசிரியர் ஆலோசகர்கலான வை.ஏ.கே.தாசிம் மற்றும் எம்.எம்.ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி பிரதான வீதியினுடாக சென்றது இதன் போது மாணவர்களினால் உளவளம் தொடர்பான பாதாதைகள் எந்திச் சென்றனர்  பின்னர் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு சென்று அங்கு வைத்தியசாலையின் வைத்தியர்களால் மன நல மற்றும் உளவலம் தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து  இவ் விழ்ப்புணர்வு ஊர்வலம் பாடசாலையை வந்தடைந்தது.