கைது செய்க!


ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு உத்தரவு ஒன்றை புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்வதற்காக நீதிமன்றில் பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு விமானங்களை கொள்வனவு செய்வதுடன் தொடர்புடைய பரிவர்த்தனையின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி, குறித்த விசாரணைகளுடன் தொடர்புடைய விசாரணை அறிக்கையை ஆராய்ந்த பின்னர் சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.