அநுராதபுரம் சிறைச்சாலையில்,அமைதியின்மை



அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சிறைக்கைதி ஒருவர் தொடர்பில், ஏனைய கைதிகள் குழப்பமடைந்ததால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்.