நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 3,076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப் பகுதிக்குள் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 771 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 394 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
Post a Comment
Post a Comment