*முஸ்லிம்களின் ஜனாசா எரிப்பு பற்றிய வினாவிற்கு விடையில்லை*



சமகி ஜன பலவேகய கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலவரம் தொடர்பில் பேசப்பட்டது.

இதன்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸா தகனம் செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எதனடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவிடம் வினவினேன்.

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடலை அடக்கம் செய்ய முடியும் என்ற உலக சுகாதார தாபனத்தின் பரிந்துரை, இலங்கையில் உள்ள விஷேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளையும் தாண்டி முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்வது அரசியல் காரணங்களால் எடுக்கப்பட்ட தீர்மானமா என்று வினவினேன்.

எனினும் இது சம்பந்தமான தன்னுடைய எந்தக் கேள்விக்கும் சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க சரியான பதில் எதனையும் வழங்காமல் நழுவிச் சென்றார்








டையில்லை"