சிறுவர் பலி,நீரில் மூழ்கி


புதுக்குடியிருப்பு , தேவிபுரம் பகுதியில் 11 வயதுடைய சிறுவன் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து நீரில் மூழ்கி நேற்றுமாலை பலியானார்.

நீண்ட நேரம் காணாத இந்த சிறுவனை வீட்டார் தேடியபோது அவர் கிணற்றில் வீழ்ந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.