"ஐஆர்ஐஎஸ் தேனா" விலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட 32 ஈரானியர்கள்



 


"ஐஆர்ஐஎஸ் தேனா" விலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட மொத்தம் 32 ஈரானியர்கள் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல்,  நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த கப்பலில் மீட்கப்பட்ட 30 பேரின் மோசமான உடல்நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கப்பலில் மொத்தமாக 180 பேர்வரை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.