பரீட்சார்த்த தேர்தல்



( கிஷாந்தன்)

 

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு  பொதுத்தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் அனுபவத்தை  பெற்றுக்கொள்வதற்கான பரீட்சார்த்த தேர்தல் நுவரெலியாவில் பீட்று தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

 

காலை ஆரம்பமான வாக்களிப்பு நண்பகல் 12 மணிக்கு நிறைவுபெற்றது. தெரிவுசெய்யப்பட்டிருந்த 150 பேரில் 99 பேர் வாக்களித்தனர்.

 

வாக்களிப்பு நிலையத்துக்கு முன்னால் கைகளை கழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியை குறிக்கும் வகையில் அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 

ஒருவருக்கு வாக்களிப்பதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகின்றது, மணித்தியாலத்துக்கு எத்தனை பேர் வாக்களிக்கலாம் என்பன உட்பட மேலும் சில விடயங்கள் அவதானிக்கப்பட்டது.

 

நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி புஷ்பகுமார தலைமையிலேயே பரிட்சார்த்த தேர்தல் இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரிகள், பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.