#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 44


 நாட்டில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.


கொழும்பு – 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரும் களனியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் உயிரிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் கொவிட் -19 காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அறிய வருகிறது.


இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது.