அக்கரைப்பற்று தெற்கில் பானம் ( ஜோசான்ட்) வழங்கி வைப்பு


 .


சுகிர்தகுமார் 0777113659 
 


  ஆலையடிவேம்பு பிரதேச (அக்கரைப்பற்று தெற்கு) மக்களை பாதுகாக்கும் முகமாக இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) இன்று வழங்கி வைக்கப்பட்டது

ஆயுர்வேத மாகாண ஆணையாளர் வைத்தியர் இ.சிறிதரின் ஆலோசனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனை வைத்தியர் ஜி.சுகுணன் மற்றும்  கல்முனை பிராந்திய தொடர்பாளர், வைத்தியர் எம்.எ.நபீலின்; வழிகாட்டலில் ஆலையடிவேம்பு ஆயுர்வேத மத்திய மருந்தகம் பொறுப்பதிகாரி வைத்தியர் .த.குவிதாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன், பிரதேச சபை செயலாளர் இ.சுரேஸ்ராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பித்த நடமாடும் இச்சேவை பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.