அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை


 



பாறுக் ஷிஹான்(
ෆාරුක් සිහාන්)


புரவி புயலை தொடர்ந்து  காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில்  சீரற்ற காலநிலை நிலவுகிறது.

 இதனால் இன்று(15) அம்பாறை மாவட்ட  கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில்  பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக இருந்த நிலையில் இடையிடையே சிறிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக   மருதமுனை  பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை  நிந்தவூர்  ஒலுவில்  பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம்இ  நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம்   கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு  அதிகமாக ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.