சர்வதேச அளவில் எழும் கண்டனம்



அமெரிக்கா மியான்மரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

"மியான்மரின் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். மியான்மர் மக்களின் ஜனநாயகம், சுதந்திரம், அமைதி, மேம்பாடு தொடர்பான விருப்பங்களுடன் அமெரிக்கா நிற்கிறது. அந்த நாட்டின் ராணுவம் தங்கள் நடவடிக்கைகளை உடனடியாக பின் வாங்க வேண்டும்" என அமெரிக்காவின் உள்துறைச் செயலர் ஆன்டனி பிலிங்கென் கூறியுள்ளார்.

"மியான்மர் நாட்டின் சட்டத்தை அந்த நாட்டு ராணுவம் மதிக்க வேண்டும். தங்களுக்கிடையிலான பிரச்சனைகளை சட்டத்தின் படி மியான்மர் ராணுவம் தீர்த்துக் கொள்ள வேண்டும். காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என ஆஸ்திரேலியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் மரிசே பெய்ன் கூறியுள்ளார்.