இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி


 


கொழும்பு:


ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடர் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இது என்பதால் வீரர்களின் செயல்பாடு முக்கியத்துவம் பெறும்.