புரட்டிப்போடப்பட்ட சீன நகரம், ஒரு மணி நேர மழை


 


சீனாவின் க்ஹெனான் மாகாணத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், சுரங்க ரயில் பாதையில் ஓடியதால் அந்த வழியாக வந்த மெட்ரோ ரயிலுக்குள் நீர் புகுந்து 12 பேர் பலியானார்கள். அங்குள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து ஐநூறுக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக ஹெனான் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாள்கணக்கில் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளும் கடுமையாக சேதம் அடைந்தன. இதனால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த கன மழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், இந்த நகரையே புரட்டிப்போட்டு விட்டது.

அந்த மாகாணத்தின் பல நகரங்களில் வீதிதோறும் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது. நீரின் வேகத்துடன் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இடிபாடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. பல இடங்களில் நடைபாதையில் சென்றவர்கள் மீட்கப்படம் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.