கொரோனாவிட கொடிய வியாபாரிகள் சிலர் உள்ளார்கள்



 வி.சுகிர்தகுமார் 0777113659  

 கொரோனாதான் கொடியது என்று பார்த்தால் அதைவிட கொடியவர்களாக இருக்கின்றனர் சில வியாபாரிகள் என அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி குறித்த சில பொருட்களை சில வியாபாரிகள் அதிக விலையில் விற்பனை செய்வதுடன் இல்லாத மக்களின் வயிற்றில் அடிப்பதாகவும் விசனம் தெரிவித்தார்.
சீனியின் விலையினை 210 ஆகவும் பால்மா பைக்கற் 600 ரூபாவாகவும் சீமெந்து 1500 ரூபா வரையிலும் இதுபோன்று பல பொருட்களின் விலையினை இரட்டிப்பாக அதிகரிக்கச் செய்தும் விற்பனை செய்வதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இதேநேரம் சில வியாபாரிகள் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் அறிய கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் விலைக்கட்டுப்பாட்டை கண்காணிக்க வேண்டிய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மௌனம் காப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் கவனத்திலெடுத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு எத்pராக சட்;ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.