ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வருகைத் தந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, ஜனாதிபதி செயலகத்தை சூழ அதிவுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்து வருகின்றனர்.

Post a Comment
Post a Comment