பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்
இன்று (14) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்றைய தினம் (15) உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment