பொத்துவிலில், தாக்குதலுக்கு இலக்கான சஜாத் உயிரிழப்பு



 


பொத்துவிலில் பொல்லால் தாக்கியதில் கடுங்காயமுற்ற பொத்துவில் -01, ராசிக் முஹம்மத் சஜாத் நேற்று மரணமடைந்தார்.

இச் சம்பவம் 4 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.  கடுங்காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார  வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இன்று அக்கரைப்பற்று மேலதிக நீதிபதி தெசிபா ராஜன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிரேதத்தைப் பார்வையிட்டார்.