ரோட்டரி நிதி உதவி!



 


( வி.ரி.சகாதேவராஜா)


  இரண்டு சிறுநீகங்களையும் இழந்த தாய்க்கு  மாதாந்த கொடுப்பனவை மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் வழங்கி வருகிறது.

 ரோட்டரி கழக தலைவர் ரோட்டேரியன் பு.ரமணன் அந்த நிதி உதவியை நேற்று முன்தினம் குருமண்வெளியில்  வழங்கி வைத்தார்.

 இதேவேளை, மண்டூர் தம்பலவத்தை பகுதியில் இரண்டு கால்களையும் இழந்த ஒருவருக்கு சக்கர நாற்காலியையும் வழங்கி வைத்தார்.
அச்சமயம் ரோட்டரி கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.