அக்கரைப்பற்று பட்டின ஜூம்ஆ பள்ளிவாயலில் மீள் நிர்மாணம் ஆரம்பம்



 


அக்கரைப்பற்று பட்டினப் பள்ளியை (சின்னப் பள்ளியை) மீள்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 19.04.2023 புதன் கிழமை நேற்று இடம்பெற்றது.


நிர்வாகிகள், குடும்பப் பிரதிநிதிகள் கல் எடுத்துக் கொடுக்க, உலமா சபைத் தலைவர் அப்துல் லத்தீப் மௌலவி தலைமையில் உலமாக்கள் அடிக்கல் நட்டனர்.

அதனை அடுத்து அக்கரைப்பற்று ஜமஇய்யத்துல் உலமாவின் சிரேஸ்ட மௌலலி  அஸ்ரப் அவர்களால் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

மிக உணர்வுபூர்வமான நிகழ்வு இது.



இதை நிர்மாணித்த அப்துஸ் ஸமது மௌலானா (சின்ன மௌலானா) .1850 களில் நிர்மாணிததார். அதன் பிறகு அதனை நிர்வகித்ததாக  அபூபக்கர் லெப்பை ஆலிமாகும்.

நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளிவாயலலில் மாரி காலங்களில் நிலக்கீழ நீர் உட்புகுவதனால், தொழ முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் இதனைக் கட்ட வேண்டுமென்று பள்ளவாயல் ஜமாஅத்தினர் கோரி நின்றனர். 

இந்த ரமழான் மாதத்தில் பள்ளிவாயல்“ நிருவாகம் முன்வைத்த கோரிக்ககைக்கு அமைவாக தனவந்தர்கள், பரோபகாரிகள் பலர் தாமாகவே முன்வந்து நிதி உதவி  அளித்ததன் பேரில் இன்று தினம் அடிக்கல் நடப்பட்டுள்ளது.