ஒத்திகை,சர்வதேச நடன தின நிகழ்வை முன்னிட்டு




 


.சுகிர்தகுமார் 0777113659 


 சர்வதேச நடன தின நிகழ்வை முன்னிட்டு 700 ற்கு மேற்பட்ட நடன ஆசிரியர்கள் மாணவர்கள் பங்குபற்றும் மாபெரும் நடன நிகழ்வின் ஒத்திகை திருக்கோவில் வலய கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தம்பிலுவில்  மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.
சர்வதேச நடன தின நிகழ்வு முதல் முறையாக அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் கல்வி வலயத்தில் வலய கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தலைமையில் இம்மாதம் 29ஆம் திகதி தம்பிலுவில்  மத்திய மகா வித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலை) இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் கலந்து கொள்வதுடன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யு.ஜி.திசாயநாயக்கவும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.கனகசூரியம் கலந்து கொள்கின்றார்.
இந்நிலையில் நடன நிகழ்வில் கலந்து கொள்ளும் 700 ற்கு மேற்பட்ட நடன ஆசிரியர்கள் மாணவர்கள் நடன ஒத்திகையில் பெரும் எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.