சுனாமி எச்சரிக்கை




 


இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. 


இந்தோனேசியா நேரப்படி அதிகாலை 3 மணியளவில் பூமிக்கு அடியில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.