"எக்டோ நூலக வாரம் - 2023”





நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி கலாசார மேம்பாட்டுத் தாபனத்தினால் (எக்டோ) ஆரம்பிக்கப்பட்டு  இயங்கி வரும் எக்டோ நூலகத்தின்  20 ஆம்  ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களை நூலகத்தில்  அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளுதல்,  வாசிப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் நூல்களை சேகரித்தல்  போன்ற நோக்கத்திற்காக  27.05.2023 தொடக்கம் 04.06.2023 வரை “எக்டோ நூலக வாரம் - 2023” எனும் தொனிப்பொருளில் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (27) எக்டோ நூலகத்தின் கேட்போர் கூடத்தில் தாபனத்தின் தலைவர் எஸ்.எல்.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி அவர்களும் விஷேட அதிதிகளாக  கல்முனை கமு/கமு/ அல்-

பஹ்ரியா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அதிபர் எம்.எஸ்.எம். பைசால், கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லீம் வித்யாலய அதிபர் ஏ.ஜி.எம். றிசாத், கல்முனை கமு/கமு/ அஷ்-ஷுஹரா வித்யாலய அதிபர் எம்.எச். எஸ்.ஆர். மஜீதியா,  கல்முனை கமு/கமு/ அல்-மிஸ்பாஹ் மகா வித்யாலய பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ் மற்றும்  கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், அப்துல் கபூர் ஞாபகார்த்த கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நூலக அங்கத்தவர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


 புத்தகங்களை சேகரிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.


இந்நிகழ்வில்  கல்முனை கமு/கமு/ அஷ்-ஷுஹரா வித்யாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா, அப்துல் கபூர் ஞாபகார்த்த கல்லூரியின் பழைய மாணவி பாத்திமா நஸ்கத் ஆகியோரால் ஒரு தொகுதி நூல்கள் எக்டோ நூலகத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேலும், இத்தாபனம் மற்றும்  நூலகத்தின் வளர்ச்சியில் சிரேஷ்ட  ஆலோசகர்களாக இருந்து வழிநடாத்திய பேராசிரியர் மர்ஹூம் ஏ.எல்.எம். அப்துல் கபூர், முன்னாள் அதிபர் மர்ஹூம் எம்.வை.எம். எச். காரியப்பர் ஆகியோரை நினைவு கூறும் முகமாக இந்நிகழ்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.