இரத்த தான முகாம்





 (வி.ரி.சகாதேவராஜா)


நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தினால் நாளை(28) ஞாயிற்றுக்கிழமை  சிவசக்தி வித்யாலயத்தில் இரத்த தான முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் உதவியோடு "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" என்ற திட்டத்தின் கீழ் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 4:00 மணி வரை இந்த முகாம் இடம் என்று இந்து இளைஞர் மன்ற பிரமுகர் பியந்த தெரிவித்தார்.