நினைவேந்தலின் 5ஆவது தொடர் நிகழ்வு




 (வி.சுகிர்தகுமார் 0777113659)


 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  நினைவேந்தலின் 5ஆவது தொடர் நிகழ்வும் அவர்தம் உறவுகளை கௌரவித்தலும் நிகழ்வும் நேற்று மாலை (14) திருக்கோவிலில்  நடைபெற்றது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் தோழர் மாறன்  தலைமையில் இடம்பெற்ற தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அம்பாரை மாவட்ட செயலாளர் சி.புண்ணியநாதன் திருக்கோவில் முன்னாள் பிரதேசசபை தவிசாளர் கமலராஜன். தமிழீழ மக்கள் விடுதலைக் இயக்க திருக்கோவில் பிரதேச பொறுப்பாளர் நேசன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அம்பாறை மாவட்ட தலைவர் தோழர் சங்கரி, செயலாளர் தோழர் கங்கா,   ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் தோழர் கரன் மற்றும் தோழர்கள், வரதன், சற்குணம், கிட்டு, தாஸ், கேதன் உயிர்நீத்தவர்களின் உறவுகள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த உயிர்நீத்தவர்களின் உருவப்படத்திற்கு உறவுகள் இணைந்து ஈகைச்சுடரேற்றினர்.
 தொடர்ந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உயிர்நீத்தவர்களின் உறவுகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னராக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உயிர் நீத்த அனைத்து உறவுகள் சார்பாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடிவிற்காக முன்னெடுத்த அர்ப்பணிப்பான நடவடிக்கை மற்றும் அவர்களை நினைவு கூரவேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார்.
மேலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால செயற்பாடுகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்தார்.
இதன் பின்னராக உயிர்நீத்தவர்களின் உறவுகள் கௌரவிக்கப்பட்டதுடன் உயிர்நீத்தவர்களின் புகைப்படங்களும் ஒப்படைக்கப்பட்டன.