திரியாயில் கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு இராணுவம் உணவு மருத்துவ உதவி!





 (வி.ரி. சகாதேவராஜா)


இந்துக்களின் பாரம்பரிய யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி புறப்பட்ட  ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் நேற்று (17) புதன்கிழமை காலை திருகோணமலை திரியாயை வந்தடைந்தனர்.

புல்மோட்டையிலிருந்து திரியாய் வந்தடைந்த யாத்திரீகர்களை அங்குள்ள இராணுவத்தினர் மற்றும் பௌத்த விகாரை பிக்கு வரவேற்றனர்.

அவர்களுக்கு காலை ஆகாரம் வழங்கி மருத்துவ முகாம் வசதியையும் ஏற்பாடு செய்து வழங்கி வைத்தனர்.

இன்று (18) வியாழக்கிழமை கும்புறுப்பிட்டியில் யாத்திரீகர்கள் தங்குவார்கள்.

குழுவில் இதுவரை 68 யாத்திரீகர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.