கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்





 (வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்களை கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளர் ஆ.மன்சூர் கோரியுள்ளார். 

விண்ணப்ப முடிவுத்திகதி 06/11/2023.

கிழக்கு மாகாணத்தில் வதியும் 18-35 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம்.

எழுத்துப் பயிற்சி மற்றும் பிரயோக பரீட்சை மூலம் இத்தெரிவு நடைபெறும். பரிட்சை கட்டணம் 500 ரூபாய் .