நீதித்துறை அதிகாரிகளின் வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு




 


தங்களின் சம்பளத்திற்கு புதிய வரிகளை விதிக்க வேண்டாம் என நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரி நீதித்துறை அதிகாரிகள் சங்கங்கள் தாக்கல் செய்த மூன்று மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.


இந்த மனுக்கள் இன்று (05) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.


உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட மனுதாரர்கள், முன்பு செலுத்தும் வரி என அழைக்கப்படும் அட்வான்ஸ் தனிநபர் வருமான வரி (APIT) நீதித்துறை உறுப்பினர்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைக் கோரியிருந்தனர்.


இலங்கை நீதித்துறை சேவை சங்கம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகிய மூன்று மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன