கடமையேற்பு




 நூருல் ஹுதா உமர்



கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இன்று (11.12.2023) டாக்டர் சஹீலா இஸ்ஸதின் கடமையேற்றுக் கொண்டார்.

சாய்ந்தமருதை சேர்ந்த இவர் முதலாவது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்ற பெண் அதிகாரியாவார். மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட இவர் சாய்ந்தமருதின் முதலாவது பெண் மருத்துவ கலாநிதியும், மருத்துவ நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் நிர்வாக உத்தியோகத்தரும் ஆவார்.

சாய்ந்தமருது முன்னாள் மரண விசாரணை அதிகாரி மர்ஹும் ராசிக் காரியப்பரின் புதல்வியும், ஓய்வுபெற்ற பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஏ. இஸ்ஸதீன் அவர்களின் மனைவியும் ஆவார். 

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் தள வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றி நிறுவனம் சார்பான போட்டிகளில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது பதவி ஏற்பு நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.