இரண்டு மாணவர்களின் ஜனாஸாக்களும் மீட்பு






நூருல் ஹுதா உமர்


மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகியிருந்தனர். அதில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15) எனும் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மாணவரின் ஜனாஸா இன்று காலை மீட்கப்பட்டது. மற்றைய மாணவரின் ஜனாசாவும் மீட்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவரும் விடயம் யாதெனில், சாய்ந்தமருதின் பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது அன்று மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக உயிர் தப்பிய மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 


கடலில் இழுத்து காணாமல் போன மாணவர்களை சம்பவத்தை கேள்வியுற்ற நிமிடம் முதல் மீனவர்களும், பொதுமக்களும் தேடி அதில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15) எனும் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மாணவரின் ஜனாஸா இன்று காலை மீட்கப்பட்டதுடன் சாய்ந்தமருதை சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) எனும் மாணவரின் உடலை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் பொதுமக்கள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னேடுத்து வருகின்றனர். கடற்சீற்றம் காரணமாக இயந்திர படகுகளை கொண்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பதில் சிரமம் உள்ளது. 


 மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்