கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரு ஜனாசாக்கள்





 நானே கொலை செய்தேன் !

--------------------------------------------------

தந்தை வாக்கு மூலம்..



பெரிய நீலாவணை - பாக்கியதுஸ் சாலிஹாத் வீதியில் இரு ஜனாஸாக்கள் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் சகோதரனும் சகோதரியும் ஆவர். இருவரும் மாற்றுத்திரனாளிகள். சகோதரனின் வயது 30. சகோதரியின் வயது 18. 


தந்தையே - தனது மேற்படி இரு பிள்ளைகளின் கழுத்தை துண்டித்துள்ளார். அவரும் - (தந்தை ) தனது கழுத்தை துண்டித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நானே - எனது பிள்ளைகள் இருவரையும் கொலை செய்தேன். எனது மனைவி ஒரு வருடத்துக்கு முன்னர் மரணித்து விட்டார். எனது மூத்த இரு ஆண் மகன்களும் வெளிநாட்டில் தொழில் புரிகின்றனர். இதனால் ஏற்பட்ட விரக்தியே இந்த நிலைக்கு காரணம் என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.